Saturday 24 August 2013

அன்பு உறவுகளே

உதவி கோரல்
 

புத்தகங்கள் சஞ்சிகைகள் சேகரிக்கும் தங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
 

நான் இதுவரை 163 சிறுகதைகள் எழுதியுள்ளேன். இவற்றுள் 100 சிறுகதைகளைத் தொகுத்து 'புன்னியாமீன் கதைகள்' எனும் தனிப்புத்தகமொன்றை (இன்ஸா அல்லாஹ்) வெளியிடும் எண்ணம் எனக்குண்டு.

ஆனால் துரதிஸ்டமாக 1980களின் இறுதியில் வெளிவந்ந பல கதைகளை நான் இழந்துவிட்டேன். குறிப்பாக இந்தியாவிலிருந்து வெளிவரும் தாமரை, கலைமகள், தீபம் போன்ற இதழ்களில் வெளிவந்த பல கதைகளும் இலங்கையில் ஞாயிறு இதழ்களில் பிரசுரமான பல கதைகளும் என்னுடைய பழைய வீட்டில்: அடைமழையின் போது பின்புறமிருந்த வித்தல் (மண்மேடு) சரிந்ததினால் வீடு பாதிக்கப்பட்டு சிதைந்து விட்டன. இதனால் என் பல பொக்கிஸங்கள் அழிந்துவிட்டன.

அன்பு உறவுகளே

தங்கள் சேகரிப்பில் உள்ள பழைய இதழ்களில் என் கதைகளை நீங்கள் கண்டால் தயவு செய்து அதன் புகைப்படப் பிரதியொன்றை எனக்கு அனுப்பினால் மிகவும் நன்றிக்குரியவனாக இருப்பேன். இதை ஓர் உதவியாகவே கோருகின்றேன்.

எனது முகவரி
P.M. PUNIYAMEEN
14, UDATALAWINNA MADIGE,
UDATALAWINNA 20802
SRILANKA

கைபேசி எண்
OO94 77 633 7258
தயவுசெய்து உங்கள் நண்பர்களுக்கும் இதனைப்பகிர்ந்து ஒத்ழைப்பைத் தாருங்கள்
நன்றி

அன்புடன்
புன்னியாமீன்


No comments:

Post a Comment