Thursday 3 July 2014

இராணுவ வெற்றிகளில் கட்டியெழுப்பப்படும் “அல்-கிலாபா” - சில மயக்கங்கள்...!!

ஒரு அமைப்பு திடீரென தன்னை இஸ்லாமிய சாம்ராஜியத்தின் காவலர்கள் என பிரகடனம் செய்கிறது. அதன் தலைவர் தனக்கு பையா (சத்தியப்பிரமாணம் ) செய்யுமாறு வேண்டுகிறார். பல கோத்திரத் தலைவர்களும், ஆயுதக்குழுக்களும், உலகின் பல பாகங்களில் போராடும் போராளியமைப்புக்களும் இவர் கட்டளைக்கு கட்டுப்பட்டு பைஅத் செய்கின்றனர். உலக முஸ்லிம் உம்மாவும் இந்த வேண்டுகோளை மானசீகமாக ஆதரிக்கிறது. எல்லாம் சரி மூன்று கேள்விகளைத் தவிர.

முதலாவது, இஸ்லாமிய அரசின் அமீருல் முஃமினீன் என்பவர் மறைந்திருந்து கொண்டு தன்னை முஸ்லிம்களின் தலைவராக வெளிப்படுத்துகிறார். அவரது பழைய இரண்டு மூன்று புகைப்படங்களை மட்டும் வைத்துக்கொண்டு. அவர் பேசிய ஒலிநாடாக்களின் துணையுடன். இது இஸ்லாமிய வரலாற்றில் நிகழாத ஒரு நிகழ்வாகும். நபி தன்னை வெளிப்படுத்திய நிலையிலேயே யத்ரிப்பின் (மதீனா) கிலாபாவை ஒழுங்கமைத்தார். பின் வந்த உத்தம சஹாபாக்களும் அவ்வாறே வெளிப்படையாக செயற்பட்டனர். ஆனால் இங்கோ நிலை தலைகீழாக உள்ளது. உமர் ரழி அவர்கள் கூறினார்கள்: யார் முஸ்லீம்களின் கருத்து பரிமாறல்கள் இல்லாமல், அவர்களது ஆலோசனையை பெறாமல் ஒரு மனிதருக்கு பைஅத் செய்கிறானோ அவர் தன்னை ஏமாற்றத்திற்கும் அழிவிற்கும் உட்படுத்திக் கொண்டார்.'

இரண்டாவது, முற்றாக ஈராக்கினை கைப்பற்றாத நிலையில், சிரியாவை அசாத்தின் இராணுவத்திடம் இருந்து பூரணமாக மீட்க முடியாத நிலையில், அது தன்னை இஸ்லாமிய கிலாபா என்கிறது. அது மட்டுமல்ல அவசர அவசரமாக ஜோர்தான் நோக்கியும், சவுதி அரேபியா நோக்கியும் அதன் அணிகளை நகர்த்துகிறது. வட ஆபிரிக்காவையும், மேற்காசியாவையும், தெற்காசியாவையும், கிழக்காசியாவையும், அவுஸ்திரேலியாவையும் இஸ்லாமிய ஆளுகைக்குள் கொண்டு வருவோம் என சூளுரைக்கிறது. அதற்கான வரைபடங்களை வெளியிடுகிறது. இராணுவவியலில் இது முட்டாள்தனமான செயற்பாடு என்பதனை விட ஒரு பொய்யான இராணுவ புனைதல் என்றே நோக்க வேண்டியுள்ளது. ஒரு கெரில்லாக் குழு மரபு இராணுவமாக பரிணமித்த நிலையில் அது பேசும் வேடிக்கையான வார்த்தைகள் இவை.


மூன்றாவது, இந்த ஐ.எஸ். எனும் அமைப்பின் கிலாபா பிரகடனத்தை உலகலாவிய முஸ்லிம் உம்மாவிற்காக போராடும் அல்லது அதற்காக உழைக்கும் ஜிஹாதிய ஆதரவு மார்க்க அறிஞர்கள் வரவேற்காமையாகும். கிலாபாவின் தேவையையும், அமீருல் முஃமினீனின் அவசியத்தையும் வலியுறுத்தும் இவர்கள் I.S. (Islamic State)-ன் வருகையை சில இராணுவ அரசியல் தேவைகளின் அடிப்படையில் அங்கிகரித்த போதிலும் அவர்களது கிலாபா பிரகடனத்தை ஆதரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. I.S. (Islamic State)-ன் பிதா மகனான முஸ்அப் அல்-ஸர்க்கவி (ரஹ்) அவர்களை வழி நடாத்திய அய்மன் ஸவாஹிரி (ரஹ்) அவர்களாகட்டும், சிரியாவினதும் ஈராக்கினதும் இவர்களது போராட்டத்திற்கு போராளிகளை அனுப்பும் சப்ளை பொட்களை வழிநடாத்திய அபூ-கதாதா (ரஹ்) ஆகட்டும், யாருமே இந்த பிரகடனத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவர்கள் பிரகடனத்தின் தேவையை மறுக்கவில்லை.

“கிலாபா” மற்றும் “அமீருல் முஃமினீன்”, இந்த இரண்டு வார்த்தைகளுமே ஒரு முஸ்லிமின் ஆன்மா, மனம், புத்தி, ஜீவன், உடல் என அனைத்திலும் எழுந்து நிற்கும் தீராத கனவு. இரத்தினங்கல் பட்டை தீட்டும் முன்பு சாதாரன கூலாங்கல் போலவே காட்சி தரும். அது போன்றுதான் ஒரு முஸ்லிமின் கிலாபத் பற்றிய அறிவு. அண்மைய ஈராக்கிய நிகழ்வுகள் இது பற்றி தெரியாத, அறியாத முஸ்லிம்களின் உள்ளங்களையும் தெளிவுபெறச் செய்து தமக்கு எதிராக நிகழ்த்தப்படும் குப்பாரிய வன்கொடுமைகளிற்கு எதிராக பாதுகாப்பளிக்கும் முஸ்லிம் சாம்ராஜியத்தின் எழுச்சியையும் வருகையையும் ஆதரிக்கவும், அதன்பால் அவர்களை மானசீகமாகவும் உணர்வுபூர்வமாகவும் ஈர்க்கச் செய்கிறது.

ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய ஒரு அணி, பின்னர் 2006-ல் I.S.I. (Islamic State of Iraq) என்ற பெயரில் அது இயங்க ஆரம்பிக்கிறது. இஸ்லாமிக் ஸ்டேட் எனவும், அமீர் முஆவியாவின் ஆட்சியை உருவாக்குவது எனவும் பிரகடனம் செய்கிறார்கள். பலூஜாவை தளமாக கொண்டு அது தன்னை மேலும் பல கட்டமைப்புக்கள் கொண்ட அணியாக வடிவமைக்கிறது. சிரியாவில் பஸர் அல்-அஸாதிய அரசிற்கு எதிரான சண்டைகளில் பங்கேற்க இது ஒரு அணியை அனுப்புகிறது. அதில் பிளவு ஏற்பட்டு Jabah al-Nusrah (JN) எனும் அணி தனியாக இயங்குகிறது. அதன் கட்டளை தளபதியாக அஹமட் ஜுலானி செயற்பட ஆரம்பிக்கிறார். அதாவது I.S.I.-யின் பைஅத் எனும் உறுதிப் பிரமாணத்தை உடைத்து கொண்டு.

பின்னர் இந்த I.S.I. அணியினர் நேரடியாகவே தங்கள் இன்னொரு அணியை சிரியாவில் இறக்குகிறார்கள். சில காலங்களில் அவர்கள் தங்களை I.S.I.S (Islamic State for Iraq & Sham) என பிரகடனம் செய்கிறார்கள். இவர்கள் I.S.I.L. (Islamic Stae for Iraq & Levant) எனவும் அழைக்கப்படுகிறார்கள். பெருமளவில் செச்னியர்களை கொண்ட போராளிக்குழுக்கள் இவர்கள் சார்பாக சிரியாவில் சமரிடுகிறார்கள். பின்னர் குளோபல் ஜிஹாத் எனும் பெயரில் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்த போராளிகள் இவ்வணியில் இணைந்து சண்டையிடுகிறார்கள். ஈராக்கின் பல நகரங்களை வெற்றி கொண்ட இவ்வணியினர் ரமழானில் நல்ல செய்தி ஒன்றை உலக முஸ்லிம்களிற்கு அறிவிப்பதாக கடந்த ஜுன் மாதம் செய்தி வெளியிடுகின்றனர் டிவீட்டரில். பின்னர் சில நாட்களிற்கு முன்னர் “இஸ்லாமிய கிலாபா” பிரகடனத்தை வெளியிடுகின்றனர். இதன் பின்னர் தங்களை I.S. (Islamic State) என அழைத்து கொள்ள ஆரம்பிக்கின்றனர்.

இப்போது தான் முஸ்லிம் உம்மாவிற்கு இது பற்றிய விழிப்புணர்வு உருவாகின்றது. அவர்களை அவசரமாகவும் ஆரவாரமாகவும் ஆதரிக்கின்றனர். எந்த அளவிற்கு என்றால் இந்தோனசியாவில் ஒன்று திரண்டு ஐ.எஸ். அமைப்பின் பிரதிநிதி முன்பு வீடியோ கொன்ஸ்பிரன்ஸ் மூலம் பைஅத் கொடுக்கும் அளவிற்கு. அவர்கள் பற்றிய கதைகள், காட்சிகள், சித்திரங்கள் என முஸ்லிம் மீடியாக்கள் அமர்களப்படுத்துகின்றன. நியாயமான எண்ணங்களின் தோற்றப்பாடுகள் இவை.

ஐ.எஸ். எனும் கிலாபாவை பொருப்பேற்றுள்ள அபூபக்கர் அல்-பக்தாதி அவர்களை அமெரிக்காவின் கைக்கூலி என்றோ அவரது அமைப்பினரை இஸ்ரேலின் மேசனரி என்றோ கொச்சைப்படுத்துவது அல்ல இந்த எழுத்துக்களின் நோக்கம். அவர்களின் கிலாபா பிரகடனம் என்பது சில இராணுவ வெற்றிகளை மையப்படுத்தி எழுப்பப்பட்ட மாயையான கோபுரம் எனும் பார்வையை உணர்த்துவதற்காகவும், தமிழ் பேசும் முஸ்லிம் உம்மா இது தொடர்பில் சில புரிதல்களை உள்வாங்குதவன் அவசியம் பற்றியதுமே.

I.S. என்ற வார்த்தை பலமானது. அது உண்மையாக இயல்பாக நிகழ வேண்டும். அதன் அமீருல் முஃமினீன் எனும் முஸ்லிம்களின் தலைவர் அன்று காட்டரபிகள் நபி பெருமானார் (ஸல்) அவர்களின் கையை முத்தமிட்டு நின்றது போல் மக்கள் முன்பாக சாதாரணமாக வெளிப்படல் வேண்டும். உறுதியான இஸ்லாமிய கிலாபாவின் இாஜியத்தை அமைத்ததன் பின்னர் அதன் விரிவாக்கங்களை மேற்கொள்ள வேண்டும். அவரின் தலைமையையும், அவரது ஆட்சியையும், உலக முஸ்லிம் உம்மாவின் அஹ்லுல் சுன்னத் வல்-ஜமாவின் இமாம்கள் பெருமளவில் அங்கீகரிக்க வேண்டும்.

இது நிகழ்ந்தால் நாமும் I.S.-ன் குடிமகன்கள் என எண்ணி மகிழ்வோம்.

by:Abu Maslama
நன்றி: http://khaibarthalam.blogspot.com/

No comments:

Post a Comment