Friday 11 July 2014

ஒரு பாமரனின் கேள்வி

அறிஞர்கள் பெருமக்களிடத்தேயும்,
உலமாக்கள் பெருமக்களிடத்தேயும்
விளக்கத்தை அறிந்து கொள்ள ஆசைப்படும்
ஒரு பாமரனின் கேள்வி


இப்போது பொதுபலசேனா குர்ஆனை பகிரங்கமாகவே விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்தத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்பட்ட போதிலும், கூட பல்லின மக்கள் வாழும் நாடு என்ற அடிப்படையில் ஏனைய இன மக்களுக்கும் மத உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக படித்த ஞாபகம்.

ஆனால் இன்று...

''குர் ஆனின் தவறான கருத்துக்களினாலேயே முஸ்லிம்கள் தவறான பாதைகளில் செல்கின்றனர். எனவே முஸ்லிம்கள் குர் ஆனை கைவிட்டுவிட்டு பௌத்தத்தை பின்பற்றுங்கள் என பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் பாராளுமன்ற முறைமைக்கு மாறாக சட்டத்தை இயற்றி, நடைமுறைப்படுத்தும் சூரா சபை, அதே நடைமுறையை இலங்கையில் செயற்படுத்தி, நாட்டில் முஸ்லிம் மதத்தவர்கள் மூலம் பிரிவினையை ஏற்படுத்த அனுமதி அளிக்க முடியாது. முஸ்லிம்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு பழியை பௌத்தர்கள் மீது சுமத்த ஆரம்பித்து விட்டனர்.

நானும் குர் ஆனை படித்திருக்கின்றேன், அதில் பிழையான கருத்துக்களும், பலி வாங்கள்களும், பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்களே மேலோங்கி நிற்கின்றன. எனவே குர் ஆனை கைவிட்டு எம்மோடு இணைந்து அமைதியாக வாழ வழியேற்படுத்துவோம் என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது கலகொட அத்தே ஞான சார தேரர் முஸ்லிம் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


இது போல இன்னும் பல..

இது
இலங்கையில் வாழும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை மீறக் கூடியதா? தெரியாமல் தான் கேட்கின்றேன் அரசியலமைப்பின் படி இத்தகைய கருத்துக்களை முன்வைக்க இடமுண்டா?




இது
இலங்கையில் வாழும் சிறுபான்மையினத்தவரான முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை மீறக் கூடியதா? தெரியாமல் தான் கேட்கின்றேன் அரசியலமைப்பின் படி இத்தகைய கருத்துக்களை முன்வைக்க இடமுண்டா?

ஜம்மியத்துல் உலமா, ஏப்ரல் 2014 இல் விடுத்த விசேட அறிக்கையில் ''அல்-குர்ஆன் ‘தகீய்யா’ எனும் ஒரு கொள்கையைப் போதிப்பதாகவும் அக்கொள்கை பிற சமயத்தவர்களை ஏமாற்றுவதற்கும், அவர்களின் உடமைகளைக் கைப்பற்றுவதற்கும், அவர்களது சொத்துகளை அபகரிப்பதற்கும் அனுமதிப்பதாகவும் அமைந்திருக்கின்றது என சமீபத்தில் ‘பொது பல சேனா’வின் செயலாளர் அல்-குர்ஆன் மீது மிகப் பெரும் அபாண்டமொன்றை சுமத்தியுள்ளார். இவ்வாறான கூற்று உலக முஸ்லிம்களை பொதுவாகவும், இலங்கை வாழ் முஸ்லிம்களைக் குறிப்பாகவும் மிகவும் மனவேதனையடையச் செய்துள்ளது.

இந்த மத நிந்தனை தொடர்பான விவகாரத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினதும் மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் அவர்களினதும் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உரிய தரப்பினர் காத்திரமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்வர் என ஜம்இய்யா எதிர்பார்க்கிறது. பல முஸ்லிம்கள் பொலிஸ் நிலையங்களில் முறையீடுகளை பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, இலங்கை வாழ் முஸ்லிம்கள் என்றும் போல நிதானமாகவும், பொறுமையுடனும் நடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக்கொள்கிறது''
எனக் குறிப்பிட்டிருந்தது.

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினதும் மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் அவர்களினதும் கவனத்திற்குக் கொண்டு வந்த போது என்ன நடந்தது? நான் நினைக்கின்றேன் அளுத்கம, பேருவளை சம்பவங்கள் இதற்குப் பின் தான் நடந்தது.

நாங்கள் இன்னும் நிதானமாகவும், பொறுமையுடனுமே நடந்து வருகின்றோம்.

இப்போது அதிகமதிகமாக விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள். சில வேளை உலமாசபையின் அடுத்த அறிக்கையும் ஆயத்தமாகியிருக்கலாம்.

உலமாக்களே
அறிஞர்களே
இப்போதும் வாயை மூடி வீட்டில் இருந்து கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டு இருந்தால் போதுமா?
நானொரு பாமரன். தெரியாமல் தான் கேட்கின்றேன் என்ன செய்யலாம் ???

No comments:

Post a Comment